Sunday, December 19, 2010

முஹல்லாவில் நவோதயா

டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு

புதிய கல்விக் கொள்கையையட்டி 1986ல் நவோதயா பள்ளி மத்திய அரசால் திட்டமிடப்பட்டது. மாநிலத்தில் தரமான கல்வி வலியுறுத்தி தேசியப் பார்வையுடன் மாணவர்களை தயாரிப்பதே நோக்கம். மத்திய அரசு குழு நிதி சுமையை ஏற்றது. மாணவர்கள், மாணவிகள் தங்கி படிக்கலாம். மனிதவள துறையின் கீழ் சுயாட்சி நிறுவனம் மேற்பார்வையிடும். தமிழ்நாடு நவோதயாவை நிராகரித்தது. 25 ஏக்கர் நிலம் மாநில அரசால் வழங்கப்படவில்லை. இந்தி மொழி கட்டாயப் பாடம். கிராமப்புற மாணவர்கள் பயனடையும் வகையில் ஆண்டுதோறும் இரண்டு கோடி ரூபாய் செலவிட மத்திய அரசு ஒப்புதலளிக்கிறது. தமிழக மாணவர்களுக்கு தொல்காப்பியம், புறநானூறு, திருக்குறள் சங்க இலக்கியம் புரியாது. ஆங்கிலம் சரளமாகப் பேச எழுதத் தெரியாது. இந்தி மொழியை வெறுத்ததால் வடபுல தொடர்பும், ஆதிக்கமும் அற்றுப் போனது. இன்று வடநாட்டு தொழிலதிபர்கள், கூலியாளர்கள் தமிழ்நாட்டை குறிப்பாக சென்னை, உட்பட நகரங்களை, மாவட்ட தலைமையிடங்களை ஆக்கிரமித்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் கட்டப்பட்ட ஐந்து, ஆறு அடுக்கு, 10 அடுக்கு கட்டிட உரிமையாளர்களின் பெயர்களைப் பார்த்தால் புரியும். 100 கோடி ரூபாய் தொழில் வருமானம் ஈட்டும் தமிழ்நாடு வணிக நிறுவன உரிமையாளர், பங்குதாரர் பெயர் பட்டியலை மாநில, தமிழ் விரும்பும் அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும். செம்மொழி கூப்பாடு புதிய மார்வாடி எழுச்சியை உண்டாக்கிய ரகசியம் பச்சைத் தமிழர்களுக்குத் தெரியவரும். முஸ்லிம் முஹல்லாக்கள் கல்வியில் நலிவடைந்துள்ளன. மத்திய அரசு தாராள நிதியுதவியுடன் துவக்கும் மூன்று மொழிக் கொள்கை நவோதயா பள்ளிக்கூடங்கள் முஸ்லிம் பகுதியில் உருவாக வேண்டும். மாநில அரசு வறட்டுப் பிடிவாதம் பாராமல் உடன் அனுமதி வழங்க முன்வர வேண்டும். தரமான அகில இந்தியக் கல்வி சிறுபான்மையினருக்குக் கிடைக்கும். வாழ்வு பிரகாசமடையும். 1992ல் பிரதமர் நரசிம்மராவ் அறிவித்த உலகமயமாக்கல், வடநாடு தென்னாடு பிரிவினையை ஒழித்தது. தமிழ்நாட்டில் புதிய தொழில்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகியுள்ளன. பீகார், ஒரிசா போன்ற பின்தங்கிய மாநிலங்களின் உழைக்கும் வர்க்கம் தமிழகத் தொழில் வளர்ச்சியை பயன்படுத்தி வளருகிறது. திராவிடக் கட்சி நிர்வாகிகளின் பேரன், பேத்திகள் இந்தி மொழி கற்றுள்ளனர். தமிழர்களுக்கு குறிப்பாக கிராமப்புறத்தவர்களுக்கு இந்திமொழி கற்கும் உரிமை 45 ஆண்டுகளாக மறுக்கப்படுகிறது. மத்திய அரசு இந்தி மொழியை ஆதரிக்கிறது. வளர்கிறது. 1965ல் இருந்த மொழி வெறி இன்று தமிழகத்தில் இல்லை. அரசியல் கூட்டணி இந்தி மொழி வெறியை தணித்துள்ளது. இந்தி தலைவர்களின் அருள், நெருக்கம், ஆசியுடன் தமிழகத் தலைவர்கள் பெரும் பணம், மீடியா வலிமை, தொழில் வளம் கொழுத்துள்ளனர். நவோதயா இந்தி பள்ளிக்கூடத்தை தடுத்து நிறுத்த, கண்டிக்க, ஒதுக்க, புறக்கணிக்க தமிழகத் தலைவர்களுக்கு எவ்வித அருகதையுமில்லை. குறைந்தபட்சம் முஸ்லிம்கள் பயனடையுமாறு முஹல்லாவில் நவோதயாவை அனுமதிக்க வேண்டும்.

நவீன ஹைதரபாத்

டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு

பாரதநாட்டின் அடிப்படைக் கட்டமைப்பில் ஆன்மீகம், இறையியல் பங்கு தவிர்க்க இயலாதது. பாக்கிஸ்தான் ஆன்மீக பாடல் கலைக் குழு ஹைதராபாத் நகருக்கு வருகை தந்தது. இறை வல்லமை, இறைவனுக்கும் மனிதனுக்குமான நெருக்கம், உலகின் நிலையாமை, யாக்கை அழிவு, ஆன்ம ஒழுக்கம் ததும்பும் பாடல்கள். இரைச்சல் தரும் ஆங்கில, மேற்கத்திய இசைக் கருவிகள் எதுவுமில்லை. ஒன்றிரெண்டு பாரம்பரிய எளிய, மண்ணுக்கேற்ற இசைக்கருவிகள்.
ஆன்மா, இதயம் உயிர்த்தெழும் இலக்கிய வரிகள். உருது மொழிக்கே உரிய செம்மொழி முதன்மை பண்புகள், சொல்லாடல்கள். உலகின் எந்த மொழியிலும் மாற்ற இயலா, பெயர்க்க முடியாத திமிர்த்தன இலக்கிய ஆளுமை. கஜல், கவ்வால், நாத், கீத், ஷமா, கானா மூவாயிரம் ரூபாய் நுழைவு கட்டணம் உருது மொழியின் ஆதிக்கத்துக்கு சான்று. பார்வையாளர்களில் இந்துக்கள் பெரும்பான்மை. நபிகளாரின் புனிதம் பலபாடல்களின் மையக்கருத்து. புர்கா பெண்கள் குடும்பத்துடன் அவையை நிறைத்தனர். நாட்டு எல்லை, தேசப் பிரிவினை, மொழிப் புலமையின் முன் மறைந்தது. திறமை, ஆர்வம், இலக்கிய ரசனை மனிதப் பண்பு மட்டுமே அரங்கத்தில் கோலோச்சியது. ஆந்திரப் பிரதேசம் நிறுவப்பட்ட நாள், மாநில முதல்வர் 35,000 கோடி ரூபாய் ஆண்டு அந்நிய முதலீடு பெருமை மிகு விளம்பரம் நாளிதழ்களில். இன்னும் 40,000 கோடி ரூபாய் சில வாரங்களில் வந்து சேரும்.

தென்னிந்தியாவின் மக்கள் அடர்த்திமிகு நகரம் ஹைதராபாத். 1591ல் முஹம்மது குலிகுதுப் மூசி ஆற்றின் கரையில் உருவாக்கிய நகரம் பாக்ய நகரம் எனவும் வரலாற்றில் புகழப்படுகிறது. 650 கி.மீ-. பரப்பில் 63 லட்சம் மக்களை வாழவைக்கிறது. 55 சதவீதம் இந்துக்கள், 41 சதவீதம் முஸ்லிம்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள், ஜைனர்களும் மன நிறைவுடன் காலங்கழிக்கின்றனர். ஹைதராபாத் பகுதியில் தீவிரவாதி தலைமறைவு, வெடிகுண்டு புதையல் கண்டுபிடிப்பு பொய்ச்செய்திகள், அவதூறு தகவல்கள் தொடர்ந்து ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவது வாடிக்கை. ஆனால் பாக்கிஸ்தான் ஆன்மநேய கலைக்குழுவின் ஹைதராபாத் நிகழ்ச்சியை ஆங்கில நாளிதழ்கள் மனமார பாராட்டின. நேர்காணல் வெளியிடப்பட்டது. தகவல் தொழில் நுட்பம், மருந்து தொழிற்சாலை, நுண்கருவிகள், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பூரண அமைதி நகரமாக வளாகங்கள் உருவாகின்றன. இந்துமுஸ்லிம் ஒற்றுமைக்கு ஹைதராபாத் சிறந்த முன்னுதாரணம். பாக்கிஸ்தான் என்றாலே அருவெறுப்பு, அராஜகம், தீவிரவாதம், பயங்கரவாதம், ராணுவ வெறி, ஆயுதக் கலாச்சாரம், முரட்டு மதவாதம் பொய் புனைவு கற்பனைக்கு ஹைதராபாத் மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இலக்கியம், மொழி, மேற்கத்திய மறுப்பு, மண்ணுக்கேற்ற இசை, ஆன்மீகப் பண்புகளை ஹைதராபாத் வாசிகள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்றனர். ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் வாழும் 30 லட்ச முஸ்லிம்கள் மத நல்லிணக்கக் காவலர்கள். மறுப்பதற்கில்லை. நவீன இந்தியாவின் முன்னுதாரணக் குடிகள்.

கழிவு நீர் பாரம்பரியம்!

டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு

கங்கை புனித நதியாக இந்தியாவில் மதிப்பு பெறுகிறது. என்றாலும் கழிவு அகற்றலுக்கு நிதி மத்திய அரசு செலவழிக்கிறது. 65 சதவீதம் மாசடைந்த நகரக் கழிவு ஆற்றில் கொட்டப்படுகிறது. புனித பயணிகள் ஆற்றை மாசுபடுத்துகின்றனர். புனித தலங்களில், நீராடும் படித்துறைகளில் மலக்கிருமிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. 1995ல் (ழிமிஸிசிறி) துவக்கப்பட்டது. நடப்பு ஐந்தாண்டு திட்டத்தில், 2100 கோடி ரூபாய் மாசு அகற்ற நிதி ஒதுக்கப்பட்டது. 20 மாநிலங்களில், 164 நகரங்கள் பயனடைகின்றன. நாட்டின் கூடுதல் கழிவுநீர் நாளன்றுக்கு 4000 கோடி லிட்டர். சுத்திகரிக்க 33,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. நகர விரிவாக்கம் ஏற்படுத்திய விபரீதம். பெரும்பாலான நகரங்கள் குடிநீர் பராமரிப்பில் 70 சதவீதத்தை மின் கட்டணத்துக்கு செலவிடுகின்றனர். நீண்ட நீர் விநியோகக் குழாய்கள் குடிநீரை கசியச் செய்து வீணடிக்கின்றன. 50 சதவீத அரிய குடிநீர் இதனால் நாசமடைகிறது. பாரம்பரிய, பழைய காலத்து நீர் கட்டுமானங்கள், முறை மிகச் சிறந்தது என திட்டக் கமிஷன் வலியுறுத்துகிறது. குளம், குட்டை, ஏரி, தரை வழி நீர் பரப்பு, ஆறு ரியல் எஸ்டேட் கொள்ளையர்களால் தீவிரமாக ஆக்கிரமிக்கப்படுகிறது. அரசு அறிக்கைகள் நீலிக் கண்ணீர், முதலைக் கண்ணீர் வடித்து பசப்புகின்றன. இரட்டை வேடம் புனைகின்றன. நகரமயமாக்கல் முதலிடம் ஒரு புறம். இன்னொரு வடிவத்தில் நிலத்தடி நீர் பராமரிப்பு கோமாளிக் கூத்துகள். மழை நீர் சேகரிப்பு வெற்று அறிக்கை, வலியுறுத்தும் அரசு சிமெண்ட் சாலை, கட்டிடம், வளாகம் ஆர்வம் காட்டுவது ஏமாற்றுவித்தை.
வீடுகளில் பயன்படும் நீர் 80 சதவீதம் கழிவு நீராக அபாயம் தருகிறது. மாநிலத்தில் 300 கோடி லிட்டர் கழிவு நீரை தினமும் சுத்திகரிக்க வேண்டும். இப்போது, பெரும்பாலும்¢ கழிவு, கழிவு நீர், மாசடைந்த பயன்படுத்தப்பட்ட நீர் ஏதேனும் ஆற்றில் கொட்டப்படுகிறது. புதிய நிலத்தடி நீர் சுரண்டல், தோண்டியெடுப்பு குறையவேண்டும். சர்வதேச நடைமுறை இது. ராட்சத மோட்டார் மின் கருவி மூலம் நிலத்தடி நீரை வரைமுறையின்றி வெளியேற்றுவது ஆபத்து. மறு சுழற்சிமுறை, மறுபயன்பாடு, கழிவு சுத்திகரிப்பு நிலையம் கவனத்தில் தேவை. சிங்கப்பூரில் புதிய நீர் பயன், தேவை முற்றிலுமாக குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழிலகங்களில் பயன்படுத்தப்பட்ட நீரை சுத்தம் செய்து மீண்டும் மீண்டும் பயன்பெறுகின்றனர். நமது மண்ணில் 20 சதவீத கழிவுநீர் மட்டுமே சுத்தமடைகிறது. ஆறு மாசு தடுப்பு திட்டம் பலகோடி ரூபாய்களை விழுங்கிய பின் படுதோல்வியில் முடியப் போகிறது. 1951&56 ஆண்டுகளில் மூன்று கோடி ரூபாய் கிராமக் குடிநீருக்கு செலவிடப்பட்டது. 2007&12 நடப்பு ஐந்தாண்டு திட்டத்தில் 90,000 கோடி ரூபாய் குடிநீருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டக்கமிஷன் இடைக்கால அறிக்கை புதிய வெளிச்சத்தை, தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது வளர்ச்சிக்கு அறிகுறி. நிர்வாக அதிகாரிகள், அரசியல் கூட்டுக் கொள்கையில் இது 40 சதவீதம் சுரண்டல், லஞ்சம், ஊழல், அலட்சியத்துக்கு போய்ச் சேருகிறது. குடிநீர் இணைப்புக் கட்டணம் சாதாரண குடிமகனுக்கு எளிதாகக் கிடைப்பதில்லை. குடிநீர் விநியோக அலுவலர்களுக்கு கொட்டியழ வேண்டும். குடிநீரை விற்று பணம் கறந்து சொகுசு வாழ்க்கை நடத்தும் அதிகாரிகள், ஊழியர்கள் கழிவுநீர் பராமரிப்பில் என்றும் அக்கரை செலுத்தமாட்டார்கள்.

சிலை மறுப்பு தமிழ்

டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு

இறைவனுக்கு உருவமில்லை. இஸ்லாமிய மத தத்துவம் உறுதியானது. சிலை, சித்திரம் பார்வையை குறுகச் செய்யும். மொழி, தேசப் பற்று இரண்டுக்கும் இது நன்றாகவே பொருந்தும். சில மறுக்கும் முஸ்லிம் சமுதாயம் இறையச்சம், இறைமேலாண்மை, இறைவன் ஆதிக்கம், இறை சடங்குகளில் பின்தங்கவில்லை. மாறாக, அதிகபட்ச மூர்க்கத்துடன், கொள்கை வெறியுடன், சமரசம் பண்ண இயலா தனித்தன்மையுடன் இறைவனை வலியுறுத்துவதில் முன்னணியில் நிற்கிறது. இறைபக்தி என்றால் நேர்மை, எளிமை, தூய்மை வாழ்வியல் விரிவு காணலாம். இறைவனை மறுக்கும், புறக்கணிக்கும் நாத்திகவாதிகள் பகுத்தறிவாதிகள், பொதுவுடைமைவாதிகள் சிலைகளை ஒதுக்குவதில்லை. சற்றேறக் குறைய வழிபாட்டுக்கு இணையாக சிலைகளை போற்றி கொண்டாடுகின்றனர். அறிவின் வீழ்ச்சி, கொள்கை நழுவலாக இதனை கருத வேண்டியுள்ளது. தலைவர் சிலை சேதம் மனித உயிரை பறிக்கிறது. தலைவர் மீதான பின்பற்றுதல், கொள்கை வாரிசுதன்மை எடுபட்டு போய் வெறுப்பு அதிகரிக்கிறது. ஒவ்வொரு இனம், சாதிக்கும் ஒரு தலைவர் சிலை மனித பண்புகளை சிதைக்கிறது. நிரந்தர பகை, சினம், ஆத்திரம், வம்பு, வழக்கு, அடிதடி, கொலைபழி நீடிக்கிறது. மக்கள் வாழும் பகுதி அனுமதி இழக்கிறது. சிலை நிற்கிறது. மனிதம் மடிகிறது.
மதம், தேசம், மொழி வளர்ச்சியில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஆங்காங்கே சேவையாளர்கள், பெருந் தொண்டர்கள், பேரறிவாளர்கள் தோன்றி பணி செய்கின்றனர். மடிந்து மண்ணுக்குள் புதைகின்றனர். உத்தமர்களின் உபதேசம் மட்டுமே இனி வழிகாட்டி. அவசரகதியில் சிலை வடித்து நகரங்களை, வாழ்விடங்களை, அங்காடி பகுதிகளை ஆக்கிரமிப்பதால் கொள்கை உயரப் போவதில்லை. மாற்றார் மதிக்கப் போவதில்லை. சிலைகள் புனிதமாகி காவல்துறை மக்கள் வரி பணம், மின் ஒளி, விளக்கு அலங்காரம் நாடு முழுக்க கோடி கோடி ரூபாய்களை பாழடிக்கிறது. சமீப காலமாக, மொழி வளர்ச்சியில் அதிகமாக சிலை பங்கேற்கிறது. சென்னையில் உலகத்தமிழ் மாநாடு 1967ல் நடைபெற்றது. உலகின் இரண்டாவது அழகிய கடற்கரையில் பழம்புலவர்களின் சிலைகள் நிறுவப்பட்டன. தமிழன்னை உருவம் கற்பிக்கப்பட்டது. குமரி முனையில் உயரமான திருவள்ளுவர் சிலை தமிழை ஒருக்காலும் பரப்ப போவதில்லை. சிலைபராமரிப்பு, ஆண்டுக்கு ஒருமுறை சடங்குத்தன மரியாதை மனித நாகரீகத்தை அழுக்காக்கிறது. பல நூற்றாண்டுகள் முன்னர் உயர்வாழ்வு தந்த பெரியோரை யாரும் பார்த்ததில்லை. கற்பனை செய்து உருவம் தந்து சிலை வடிவமைப்பது, சிற்பியை பாராட்டி பொற்கிழி வழங்குவது மன்னிக்க முடியாத வரலாற்று துரோகம். தமிழ் நாட்டில் தமிழ்மொழி சிதைவுக்கு சிலைகள் ஒரு காரணம். சிலை மறுப்பு தமிழ் குறித்து தமிழர்கள் சிந்திக்க வேண்டும். சிலை மறுத்தல், ஒழித்தல், ஒதுக்குதல், துடைத்தல் நவீன தமிழகம் காணும் கனவு.

அரசு ஊழியம் அசட்டுத்தனம்!

டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு

ராணுவ வீரர்கள் நாட்டின் வெளிப்புறத்தை பாதுகாக்கின்றனர். 24 மணி நேரம் பனிமலை, பாலைவனம், நடுக்கடல் விழிப்புடன் பணி செய்கின்றனர். பணி இடம் அருகே குடிலை, இருப்பை அமைத்துக் கொள்கின்றனர். ஆறுகோடி தமிழர்களின் நிர்வாகத்தை அரசு ஊழியம் உள்நாட்டில் பொறுப்பேற்கிறது. பத்து லட்சம் ஊழியர்கள் பணியில் உள்ளனர். இவர்களை நம்பி அரசு பட்ஜெட் பணத்தை ஒப்படைக்கிறது. 60 தமிழர்களுக்கு ஒரு அரசு ஊழியர் நியமனமாகிறார். அமைச்சர்கள் பதவி இலாகா துறைமாற்றப்படுகிறது. வன இலாகா மந்திரி திடீரென்று ஒரு நாளில் தகவல் தொழிநுட்ப அமைச்சராகிறார். பிற்பட்டோர் மந்திரி மருத்துவத்துறையை ஆட்டிப்படைக்கிறார். பெட்ரோல் அமைச்சர் நள்ளிரவில் பஞ்சாயத்து துறையில் அமர்த்தப்படுகிறார். அமைச்சர் பதவிக்கும் பல்கலைக்கழகப் பட்டத்துக்கும் துறை நிபுணத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. அரசு ஊழியம் என்பது மட்டுமே இங்கு அடிப்படை விதி. பொதுநலன் இறுதி எதிர்பார்ப்பு. அரசு ஊழியர் துறை இலாகா மாற்றப்பட வேண்டும். குத்தகை, உரிமையாளர், ஓனர் போல சீட்டை ஆக்கிரமிக்கக்கூடாது. எத்தகைய பொது அறிவும் இல்லாமல் ஒருவர் அரசு ஊழியராகிறார். புற்றீசல் போல பெருகியுள்ள, ஏதேனும் ஒரு மரத்தடி கல்லூரியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு தேவை. அவ்வளவுதான். கோடி ரூபாய் அதிகாரம், அரசு நிர்வாகம், பணம் இவரிடம் தஞ்சம்.
60 தமிழர்களின் சாலை, கல்வி, போக்குவரத்து, சாதி, பிறப்பு, இறப்பு சான்றிதழ், உணவு பங்கீடு, குடிநீர் வரி, நிலவரி, கட்டிட அனுமதி, வணிக ஒப்புதல் கடன், கடை பெர்மிட் அனைத்தும் ஒரு அரசு ஊழியர் காலடியில். ஒவ்வொரு தமிழரும் மண்டியிட்டு பிச்சை கேட்டு, மடியேற்றி, சரிசெய்து, நன்கு கவனித்து, எப்படியாவது குஷிப்படுத்தி, திருப்தி செய்து தமது வாழ்வியல் நலன்களுக்கு அரசு ஊழியரிடம் காவடி தூக்க வேண்டும். துறையில் பணிபுரியும் ஊழியர் எண்ணிக்கை, பட்ஜெட் நிதி, செலவழிக்கப்பட்ட தொகை, அமைச்சர் பெயர், முதன்மை செயலாளர் பெயர், பட்டம், கல்வி தகுதி, திறன், சுற்றுப்பயண விவரம் எதுவும் ஓர் அரசு ஊழியருக்கு தெரியாது. தெரிய வேண்டிய, எவ்வித அவசியமில்லை. 30 நாட்கள் ஓடினால் முழுசம்பளம். தனியார் துறை ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு கட்டத்திலும் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகின்றனர். கோப்புகளை பந்தாடும் தகுதி, காலம் கடத்தும் திறமை மட்டும் அரசு ஊழியருக்கு போதுமானவை. பணி செய்யும் இடம், பகுதி அருகில் அரசு ஊழியர் வசிப்பதில்லை. தனது வீட்டுக்கருகே பணியிடம், அலுவலகம் கோறுகிறார். இதனால் அரசு நிதி பாழாகிறது. சில மாவட்டங்களில், தாலுகாக்களில் அளவுக்கதிகமாக அரசு ஊழியர்கள். இன்னும் சில மாவட்டங்களில் எதிர்மறை நிலை. அரசாங்கத்தின் பிடியில், காலடியில் பொதுமக்களின் கழுத்து சிக்கியிருப்பதால் தமிழர்களின் வாழ்வு தடுமாறுகிறது. அரசு ஊழியரின் கையெழுத்தை பெறாமல் ஒரு சான்றிதழையும் காணமுடியாது. வரவு தடுக்கப்படும். காரணமின்றி கோப்புகளை இழுத்தடிக்கும் அரசு ஊழியரை டிஸ்மிஸ் பணிரத்து செய்யவேண்டும். 8000 ரூபாய் மாதம் வைப்பு நிதி (நிறிதி) செலுத்தும் ஊழியரின் வீடுகளை ரெய்டு வரிசோதனை செய்யலாம். தகுதியை வளர்த்துக் கொள்ளாமல் வசதிகளை மட்டும் அனுபவிக்கும் அரசு ஊழியம் தொடர் கண்காணிப்புக்குள்ளாக வேண்டும்.

வெளிநாட்டு மோகம் தேவையில்லை!

டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு
கோழை உதவாக்கரையாய் நாம் அமெரிக்காவுடன் ஓடுகிறோம். அவர்களின் சாதனை, பெருமை, நிர்வாகம் குறித்து புகழ்கிறோம். நியூயார்க் நகரம் பொருளாதாரம் சிக்கலில் வாழ, சிக்கி, சரிவு கண்டது. உடன் இங்கிலாந்து ஓடுகிறோம். இங்கிலாந்தில் வேலையில்லா திண்டாட்டம் அனுபவித்ததும், அடுத்த விமானத்தில் அரபு நாடு பறக்கிறோம். வளைகுடா பகுதியில் போர் மூண்டதும் காப்பாற்றுமாறு இந்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். இந்தியாவுக்கு திரும்ப அழைக்குமாறு வேண்டுகிறோம். முடிந்த அளவு, ஒவ்வொருவரும் நாட்டை திட்டுகிறோம். நாட்டு அமைப்பை சீர்திருத்த ஒருவரும் தயாராயில்லை. நமது மனச்சாட்சியை பணத்திடம் அடகு வைத்துள்ளோம். யாரேனும் ஒருவர் தொலைதூரத்திலிருந்து வந்து நாட்டை சுத்தப்படுத்துவார். அதிசய தொடப்பம் கொண்டுவரட்டும் என எதிர்பார்க்கிறோம். பம்பாய் நகராட்சி ஆணையர் தினைகர் ஒருமுறை கூறினார். விலைமதிக்க முடியாத கழிவை வெளியில் தள்ள பணக்கார நாய்கள் வீதியில் உலா வருகின்றன. கண்ட இடங்களில் சிறுநீர் கழிக்கின்றன. நாய் மலம் தெருவில் கொட்டப்படுகிறது. இத்தகைய மேல்தட்டு படித்த வர்க்கம் நகரம் மாசு அடைவதாக புகார் கூறுகின்றனர். நடைபாதை சரியில்லை என அரசாங்கத்தை குறை காண்கின்றனர். நாய் வெளியில் செல்லும்போது ஒரு துடைப்பத்துடன் அழைத்துச் செல்லுங்கள். நகரம் சுத்தமாகும். அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில் நாய் மலம், மூத்திரத்தை நாய் உரிமையாளர் வீதியில் அகற்றவேண்டும். அரசாங்கத்தை தேர்வு செய்ததும் நமது அனைத்து கடமைகளையும் பொறுப்புகளையும் தட்டி கழிக்கிறோம்.
மீடியா இழிவுகளை மட்டுமே படம் பிடிக்கிறது. நமது சாதனை, வலிமை, அங்கீகரிக்க இந்தியாவில் வாழும் நாம் சங்கடப்படுகிறோம். நமது நாடு பெரியது. பாராட்டத்தக்க பல பெருமைகள் நமக்குண்டு. பால் உற்பத்தியில் உலகில் முதலிடம். தொலைதூர விண்கல இயக்கத்தில் (ஸி.ஷி.ஷி.) முதலிடம். கோதுமை உற்பத்தியில் இரண்டாவது இடம். அரிசி விளைச்சலில் உலகின் இரண்டாவது பெரிய நாடு. தன்னிறைவு பெற்ற சுய ஆதிக்கமுள்ள பல கிராமங்களை தனிநபர் உழைப்பு சாதித்துள்ளது. பல லட்சம் உதாரணங்களை மீடியா புறக்கணிக்கிறது. கெட்ட செய்தி, தோல்வி, அழிவு மட்டுமே மீடியா காட்டுகிறது. டெல் அவிப் இஸ்ரேல் நகரில் நான் செய்தித்தாள்களை படித்தேன். முதல் நாள் ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. குண்டு வெடிப்பு, சாவு, ரத்தக்களரி. என்றாலும் செய்திகளில் முதல் பக்கத்தில் யூத விவசாயி சாதனை வெளியிடப்பட்டது. ஐந்து ஆண்டுகளில் பாலைவனப் பகுதியை சோலைவன சாதனைப் படுத்தியுள்ளார். அனைவரையும் உந்தி உயரே தள்ளும் அனுபவம். அழிவு சாவு செய்திகள் உட்புறத்தில் இதர செய்திகளுடன் புதையுண்டு பிரசுரிக்கப்பட்டதை படித்தேன். வெளிநாட்டு டி.வி., சட்டை, தொழில்நுட்பம் மீது அதிக மோகம். இறக்குமதி சரக்கு மீது ஆர்வம் இந்தியர்களுக்கு அளவிடமுடியாது. தன்னிறைவு மட்டுமே சுயமரியாதை தரும். ஹைதராபாத் நகரில் சொற்பொழிவாற்ற நான் வந்தேன். 14 வயது சிறுமி வளர்ந்த இந்தியாவில் வாழ்வது எனது லட்சியம் என்று கூறினார். இந்தியா நலிந்த நாடல்ல. மிகப்பெரிய வளர்ந்த நாடு. ஆஸ்திரேலியா, நியூஜிலாந்தில் சாலையில் தேங்காய் உடைக்க முடியாது. துபையில் ரமலான் மாதம் உணவு சாப்பிட பகலில் அனுமதியில்லை. ஜித்தாவில் தலை மூடாமல் நடமாட முடியாது. மேலை நாடுகளில் குறிப்பிட்ட நேரத்துக்கும் மேல் கார் பார்க்கிங் ஆக்கிரமிக்க வழியில்லை. வாஷிங்டனில் 88 கி.மீ. மேல் வாகனம் ஓட்ட முடியாது.

ஹைதராபாத் நகரில் முன்னாள் குடியரசு தலைவர் மாண்புமிகு ஏபிஜே அப்துல் கலாம் உரை.

பகிரங்க தூக்கு தேவை!

டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு

தூக்கு தண்டனைக்கு எதிராக பலத்த வாதங்கள் படித்தவர் மத்தியில் எழுகிறது. பெருகி வரும் குற்றச் செயல்கள் காந்திய சிந்தனைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. அகிம்சை, தூக்கு, சகிப்பு, மன்னிப்பு, ஆயுள் தண்டனை, காவல் நீடிப்பு, முன் ஜாமீன், பலவீன சாட்சி, பல்டியடித்த சாட்சி சொற்றொடர்கள் மீண்டும் புதிய அர்த்தம் பெற வேண்டும். சிறுமியை கற்பழித்துக் கொலை, கடத்தல் கொலை, கலவரக் கொலை, ஊர்மக்கள் மத்தியில் ஓட ஓட விரட்டிக் கொலை உயிர் பறிப்பு காட்சிகள் புதிய வழக்குகளின்¢ எண்ணிக்கையை மட்டும் உயர்த்துகின்றன. வழக்கறிஞர்களுக்கு நல்ல வசூல் வேட்டை. இதழ்கள், தனியார் ஊடகங்களுக்கு அதிக விளம்பர வரவு. உலகில் மிகப்பெரிய அரசியல் சட்டம். மூன்று ஆண்டுகள் சட்ட மாமேதை இரவு பகல் உழைத்து உருவாக்கியது. 100 ஓட்டைகள் சட்டத்திருத்தம் போர்வையில் ஆட்சியாளர்களின் ஆசைகள் அரங்கேற்றம். புதிய புதிய சட்டங்கள். நடைமுறைப்படுத்த ஒருவருக்கும் துணிவில்லை. தலைநகர் சென்ட்ரல், அண்ணா சாலை மத்திய, மக்கள் நடமாட்ட பகுதியில் பகிரங்க தூக்கு மேடை தேவைப்படுகிறது. ஆறுகோடி தமிழர்களின் அமைதி வாழ்வை ஆறாயிரம் குற்றவாளிகள் பறிக்கின்றனர். பணம் பெற்று கூலிக்கு கொலை செய்யும் கும்பல் கொழுத்து வளர்கிறது. நாகரீக சமுதாயம் வேடிக்கை பார்க்கிறது. நீதிமன்றம், அரசியல்வாதி, சட்டமன்றம், ஊடகம், காவல்துறை ஒவ்வொரு பிரிவும் அடுத்தவர் தலையில் பழியைப் போடுகின்றனர். மனித உயிரை இறைவன் படைத்தான். உயிர் பறிக்கும் அதிகாரம் மனிதனுக்கில்லை. மனிதரின் உயிரை பகிரங்கமாக வெட்டிச்சாய்க்கும் கொடூரவாதியை உயிருடன் நிம்மதியாக வாழ அனுமதிக்கக்கூடாது. மனித உரிமை காரியவாதிகள் பத்தாம்பசலித்தனமாக, சிறுபிள்ளைத்தனமாக கூச்சலிடுகின்றனர். தூக்குதண்டனை நடைமுறை செயல்படவேண்டும். இனிவேறு வழியில்லை. யார் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம். சாட்சிகளை பலவீனப்படுத்தினால் போதும். நீதிமன்றச் செலவுகளை, ஸ்டேஷன் கவனிப்புகளை சமாளித்தால் போதும். எளிதில், சில வாரங்களில் அரவமின்றி காலரை தூக்கிவிட்டுக் கொண்டு, நிம்மதியாக நெஞ்சை நிமிர்த்தலாம். இன்றைய லஞ்ச, ஊழல் சூழ்நிலை மேன்மேலும் கொடூர குற்றவாளிக்கு சாதகமாக திகழ்கிறது. கொலையாளிகள் உடன் சில நாட்களில் தண்டிக்கப்பட வேண்டும். அமைதி விரும்பும் சராசரி மனிதர்களை காப்பாற்ற தூக்கு மேடை பயன்படும். நகரில் ஒரு சிலர் எளிதாக கொலை செய்து தப்பிப்பது, சமுதாயத்தின் இன்னொரு பக்கத்தில் கோழைகளை உருவாக்கும். வெறித்தன கொலைக்கு தூக்கு மட்டுமே சரியான பரிசு. மாதக்கணக்கில் வழக்கை நீடிப்பது, வாய்தா, சாட்சி பிதற்றல் தேவையேயில்லை. பொதுமக்கள் மத்தியில் வாரந்தோறும் பகிரங்கமாக நகரில் கொலையாளிகளை தூக்கிலிட, துடிதுடிக்கச் சாகடிக்க வேண்டும். தீயவர்களை கொல்வது எல்லா காலங்களிலும் நடைமுறைச் சித்தாந்தம்.
தமிழ்நாடு குற்றவியல் பட்டியல்
கொலை : 2006 & 1273, 2007 & 1521, 2008 & 1630, 2009 & 1644
சொத்துக்காக, பணத்துக்காக கொலை : 2004 –& 74, 2008 & 105, 2009 & 123
கொள்ளை : 2008 & 662, 2009 & 1144
வழிப்பறி : 2005 -& 437, 2008 & 3849, 2009 & 4221
கற்பழிப்பு : 2007 & 523, 2008 & 573, 2009 & 596