“இல்லா லியஃபுதூன்” இபாதத் செய்வதற்கென்றே மனித இனம் படைக்கப்பட்டதாக இறைமறை கூறுகிறது. 24 மணி நேரம் ஒருவர் இபாதத் மதச் சடங்கு செய்ய இயலாது. 365 நாட்கள் புரியும் அனைத்து பணிகளையும் புனித மதச்சடங்குக்கு ஒப்ப அமைத்துக் கொள்ள வேண்டும். சடங்குகளில் தொழுகை பிரதானமாகும். நிய்யத் இலக்கு மிக இன்றியமையாதது. எழுத்தாளர். படைப்பாளிக்கும் நோக்கம் தேவை. அனைத்து மக்களும் இன்புற்றிருக்க வேண்டும். தொழுகையில் தனி நபர் துதி, புகழ் கூடாது. தன்னை தாழ்த்திக் கொள்ளல் முதன்மை. இதழியலாளருக்கும் சுய புகழ், சுய தம்பட்டம் “ஜாயிஸ்” அனுமதியில்லை. ஸப் அணிவகுத்தல், தொழுகையில் அவசியம். படைப்பாளியும் தன்னையத்தவருடன் கை கோர்க்கிறார். குழுவில் இணைகிறார். தனியாக தொழுதால் பலன் குறைவு. சமூகம் வலிமை பெற ஒரே சிந்தனையுள்ள படைப்பாளிகள் ஒருங்கிணைய வேண்டும். இல்லையேல், 27 மடங்கு நட்டம் வந்து சேரும். நிமிர்தல், குனிதல், நெற்றி பணிதல், இறை வேட்டல், வலது இடது திரும்புதல் தொழுகையில் உண்டு. இபாதத் இறைவணக்க வழிபாட்டு சடங்குகளின் பல்வேறு செயல்கள். அனைத்தும் சம அந்தஸ்துடையவை. சிறுகதை, கவிதை, தலையங்கம், துணுக்கு, கட்டுரை, எதிர்வினை படைப்பாக்க வடிவங்கள். மனித மனத்தை செம்மைப்படுத்தி நேர்வழி பெறுவதே முதன்மை நோக்கு. தொழுகையாளி தான் மட்டும் தொழுதால் போதாது. எதிரில் காணும் மனித குல உறுப்பினர்களை தொழுகுமாறு வலியுறுத்த வேண்டும். தொடர்முயற்சி மரணம் வரை தொடரும். படைப்பாளியும் எழுத்தின் பிரகாசத்தை உணர்ந்து பிரச்சாரவாதியாக இயங்க வேண்டும். தலைவர், இமாம் தொழுகையில் முன் நிற்பார். இவரை முந்தக் கூடாது. தொழுகை பாழாகும். படைப்பாளியும் எடிட்டர் ஆசிரியருக்கு கட்டுப்பட வேண்டும். புறக்கணிக்கக்கூடாது. இமாமுக்கு கீழ்படிதல், இமாமை உருவாக்குதல் இரண்டு செயல்களும் ஏக காலத்தில் நடைபெறுவதாகும். படைப்பாளி ஆசிரியருக்கான அனைத்து குணங்கள், தகுதிகளையும் ஒருங்கே பெற்றவர். இருவருக்குமிடையில் எவ்விதமுன்னுரிமை, வித்தியாசமில்லை. இமாமுக்கு தெரிந்த, தெரிய வேண்டிய அனைத்து நுட்பங்களும், மஸாயில்களும் படைப்பாளிக்கும் நன்கு பரிச்சமாயிருக்க வேண்டும். விதிவிலக்கு சிறிதுமில்லை. சிறப்பு அனுமதி ஏதுமில்லை. இமாம் கிறுக்குத்தனம் செய்தால், பொறுப்பற்று செயல்பட்டால் பின் நிற்பவர் முந்த வேண்டும். பலவீனத்துக்கு இங்கு இடமில்லை. அனைவரும் இமாம். தலைமைக்கு அவசியப்பட்டால் அணிக்கு தலைமையேற்க தயார். இமாம் பதவி சாசுவதமல்ல. அதிகபட்ச தகுதியுடைவர், கூடுதல் குணப்பண்புடையோர் தென்பட்டால், எதிரில் வந்தால் இமாம் விலகி வழிவிடவேண்டும். இடம் தரவேண்டும். துர்நாற்றம் வரக்கூடாது. கழிவு சுமந்து தொழக்கூடாது. எவ்வித இரைச்சல் கூடாது. தொழுகையை போன்றே மீடியாவிலும் பொய், அவசரக்கூச்சல், புழுதிவாரி யிரைத்தல், புனைவு, அவலம், அரைகுறை தகவல் பரிமாற்றம், அவதூறு நல்ல நோக்கத்தை முறித்துவிடும். தொழுகை இபாதத் மற்றும் இதழியல் படைப்பாக்கம் இரண்டும் வெவ்வேறல்ல. அமைதி, சுபீட்ச வாழ்வு, பொது நலன், பிறர் துன்பம் களைதல், இரண்டிலும் பொது அம்சம். திருக்குர்ஆன் கூறும் இலக்கணம் தொழுகைக்கும் பொருந்தும். படைப்பாளி இயக்கத்துக்கும் சரியாகவே பொருந்தும். தர வேறுபாடு காண வேண்டாம்.
(முஸ்லிம் முரசு, Dec 2010)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment