Sunday, December 19, 2010

கழிவு நீர் பாரம்பரியம்!

டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு

கங்கை புனித நதியாக இந்தியாவில் மதிப்பு பெறுகிறது. என்றாலும் கழிவு அகற்றலுக்கு நிதி மத்திய அரசு செலவழிக்கிறது. 65 சதவீதம் மாசடைந்த நகரக் கழிவு ஆற்றில் கொட்டப்படுகிறது. புனித பயணிகள் ஆற்றை மாசுபடுத்துகின்றனர். புனித தலங்களில், நீராடும் படித்துறைகளில் மலக்கிருமிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. 1995ல் (ழிமிஸிசிறி) துவக்கப்பட்டது. நடப்பு ஐந்தாண்டு திட்டத்தில், 2100 கோடி ரூபாய் மாசு அகற்ற நிதி ஒதுக்கப்பட்டது. 20 மாநிலங்களில், 164 நகரங்கள் பயனடைகின்றன. நாட்டின் கூடுதல் கழிவுநீர் நாளன்றுக்கு 4000 கோடி லிட்டர். சுத்திகரிக்க 33,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. நகர விரிவாக்கம் ஏற்படுத்திய விபரீதம். பெரும்பாலான நகரங்கள் குடிநீர் பராமரிப்பில் 70 சதவீதத்தை மின் கட்டணத்துக்கு செலவிடுகின்றனர். நீண்ட நீர் விநியோகக் குழாய்கள் குடிநீரை கசியச் செய்து வீணடிக்கின்றன. 50 சதவீத அரிய குடிநீர் இதனால் நாசமடைகிறது. பாரம்பரிய, பழைய காலத்து நீர் கட்டுமானங்கள், முறை மிகச் சிறந்தது என திட்டக் கமிஷன் வலியுறுத்துகிறது. குளம், குட்டை, ஏரி, தரை வழி நீர் பரப்பு, ஆறு ரியல் எஸ்டேட் கொள்ளையர்களால் தீவிரமாக ஆக்கிரமிக்கப்படுகிறது. அரசு அறிக்கைகள் நீலிக் கண்ணீர், முதலைக் கண்ணீர் வடித்து பசப்புகின்றன. இரட்டை வேடம் புனைகின்றன. நகரமயமாக்கல் முதலிடம் ஒரு புறம். இன்னொரு வடிவத்தில் நிலத்தடி நீர் பராமரிப்பு கோமாளிக் கூத்துகள். மழை நீர் சேகரிப்பு வெற்று அறிக்கை, வலியுறுத்தும் அரசு சிமெண்ட் சாலை, கட்டிடம், வளாகம் ஆர்வம் காட்டுவது ஏமாற்றுவித்தை.
வீடுகளில் பயன்படும் நீர் 80 சதவீதம் கழிவு நீராக அபாயம் தருகிறது. மாநிலத்தில் 300 கோடி லிட்டர் கழிவு நீரை தினமும் சுத்திகரிக்க வேண்டும். இப்போது, பெரும்பாலும்¢ கழிவு, கழிவு நீர், மாசடைந்த பயன்படுத்தப்பட்ட நீர் ஏதேனும் ஆற்றில் கொட்டப்படுகிறது. புதிய நிலத்தடி நீர் சுரண்டல், தோண்டியெடுப்பு குறையவேண்டும். சர்வதேச நடைமுறை இது. ராட்சத மோட்டார் மின் கருவி மூலம் நிலத்தடி நீரை வரைமுறையின்றி வெளியேற்றுவது ஆபத்து. மறு சுழற்சிமுறை, மறுபயன்பாடு, கழிவு சுத்திகரிப்பு நிலையம் கவனத்தில் தேவை. சிங்கப்பூரில் புதிய நீர் பயன், தேவை முற்றிலுமாக குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழிலகங்களில் பயன்படுத்தப்பட்ட நீரை சுத்தம் செய்து மீண்டும் மீண்டும் பயன்பெறுகின்றனர். நமது மண்ணில் 20 சதவீத கழிவுநீர் மட்டுமே சுத்தமடைகிறது. ஆறு மாசு தடுப்பு திட்டம் பலகோடி ரூபாய்களை விழுங்கிய பின் படுதோல்வியில் முடியப் போகிறது. 1951&56 ஆண்டுகளில் மூன்று கோடி ரூபாய் கிராமக் குடிநீருக்கு செலவிடப்பட்டது. 2007&12 நடப்பு ஐந்தாண்டு திட்டத்தில் 90,000 கோடி ரூபாய் குடிநீருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டக்கமிஷன் இடைக்கால அறிக்கை புதிய வெளிச்சத்தை, தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது வளர்ச்சிக்கு அறிகுறி. நிர்வாக அதிகாரிகள், அரசியல் கூட்டுக் கொள்கையில் இது 40 சதவீதம் சுரண்டல், லஞ்சம், ஊழல், அலட்சியத்துக்கு போய்ச் சேருகிறது. குடிநீர் இணைப்புக் கட்டணம் சாதாரண குடிமகனுக்கு எளிதாகக் கிடைப்பதில்லை. குடிநீர் விநியோக அலுவலர்களுக்கு கொட்டியழ வேண்டும். குடிநீரை விற்று பணம் கறந்து சொகுசு வாழ்க்கை நடத்தும் அதிகாரிகள், ஊழியர்கள் கழிவுநீர் பராமரிப்பில் என்றும் அக்கரை செலுத்தமாட்டார்கள்.

No comments:

Post a Comment